"உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயக்கம்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-16 19:53 GMT
உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த அன்னை இந்திரா நகர் காலனியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அவர் கலந்துரையாடினார். அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்