தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டது : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குறித்து துணை முதலமைச்சர் கருத்து

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-11 09:50 GMT
சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் எரிக்கப்பட்ட அரசாணை திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சிக்காலத்திலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதாகவும், ஆனால் எந்த அரசு ஊழியரும் கைது செய்யப்படவில்லை என்றார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் போதுமான விளக்கத்தை அளித்து விட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்