கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகள் - கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2019-02-10 05:18 GMT
கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு  கூடுதல் இழப்பீடு  வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சேதமடைந்த  ஆயிரத்து 51 படகுகளுக்கு 683 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சேதமடைந்த பைபர் படகுகளுக்கு 570லட்ச ரூபாயும்,  பாதி சேதமடைந்த படகுகளுக்கு 113 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த பைபர் படகுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 85 ஆயிரம் ரூபாயையும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கடந்த 4ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.அதன்படி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்