திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : கைதான 3 பேர் நீதிபதி முன் ஆஜர்

கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-02-09 23:41 GMT
கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 3 பேர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் தேதி ராமலிங்கம் கொல்லப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், முஹம்மது தவ்ஃபீக், முகம்மது ஹபீஸ் , சையத் பாட்சா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களை முகமூடி அணிவித்து கும்பகோணம் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்