25 சவரன் நகைகள், ரூ 4.50 லட்சம் பணம் கொள்ளை : தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
வேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொழிலதிபர் வீட்டில் அரங்கேறியுள்ள கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொழிலதிபர் வீட்டில் அரங்கேறியுள்ள கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் தென்னைமரத்தெரு பகுதியை சேர்ந்த பன்னீர் என்பவர், ஊது பத்தி மொத்த விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் , திருமண நிகழ்ச்சிக்கு சென்றதை அறிந்த மர்ம நபர்கள் , வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், நான்கரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். நகை பணத்தின் மொத்த மதிப்பு 11 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.