சமூக வலைதளங்களில் பிரியங்கா மீது அவதூறு : நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-04 11:07 GMT
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, மகளிர் காங்கிரஸ் செயலாளர் வழக்கறிஞர் சுதா அரசியலில் முன்னேறும் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாகவே கருத்து தெரிவிக்கப்படுவதாக கூறினார். தங்கள் அடையாளங்களை மறைத்து பெண் அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்