மைவாடி அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி - குறைந்த அளவு மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முடிவு
கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்ட சின்னதம்பி யானை, உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்ட சின்னதம்பி யானை, உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ளது.ரயில் நிலையம் அருகேயுள்ள கரும்பு காட்டில் இருக்கும் சினத்தம்பியை பிடிக்க, கும்கி யானை கலீம் வந்துள்ளது. சின்னதம்பியை, கலீம்தான் வனத்துறையிடம் ஏற்கனவே பிடித்து கொடுத்தது. இந்நிலையில், சின்னத் தம்பியை குறைந்த அளவு மயக்க மருத்து கொடுத்து பத்திரமாக பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதன் உடல் நலத்தை கண்காணிக்க மருத்துவ குழுவும் அங்கு வந்துள்ளது.