ஒய்வு பெற்ற முதல்நிலை காவலர்கள் ஒன்றுக்கூடல்

45 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்

Update: 2019-02-02 11:54 GMT
நேரடி முதல் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் 45 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்றது. 1972-ல் காவலர்களாக பணியில் சேர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர்கள், இங்குள்ள தனியார் மண்டபத்தில் ஒன்று கூடினர். இந்த சந்திப்பில் காவலர்களின் குடுப்பத்தினரும்  கலந்து கொண்டனர். தங்களது பணி காலத்தில்  நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்