உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற வேன் விபத்து
சத்தியமங்கலம் அருகே உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற அமரர் ஊர்தி வேன் விபத்துக்குள்ளானது.
சத்தியமங்கலம் அருகே உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற அமரர் ஊர்தி வேன் விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து புறப்பட்டு சத்தியமங்கலம் வழியாக சென்ற அந்த வேன் அத்தியப்பகவுண்டன் புதூர் அருகே சாலையோர தடுப்பு சுவரை இடித்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அருசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேறு வேன் வரவழைக்கப்பட்டு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.