நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

நேர்மையாக பணியாற்றினால் பலன் காத்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-01 01:31 GMT
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் 197 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி அவர் பேசுகையில், குற்ற வழக்கை கண்டு பிடிப்பதில் இந்தியாவிலே சிறப்பாக தமிழக காவல் துறை செயல்படுகிறது என்றார். மேலும் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்