சென்னை : மினி பேருந்து மோதி பள்ளி மாணவி பலி

சென்னை பல்லாவரம் அருகே மினி பஸ் மோதியதில், பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-28 10:19 GMT
சென்னை பல்லாவரம் அருகே மினி பஸ் மோதியதில், பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூர் குருசாமி நகரை சேர்ந்த அம்ஜித் தனது மகள் ஆலியாவுடன், இன்று காலை தேனாம்பேட்டையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மினி பஸ்சை அவர் முந்த முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் இருந்து ஆலியா கீழே விழுந்தார். அவர் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், ஆலியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்