மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

Update: 2019-01-28 07:42 GMT
திருவள்ளூர் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.  பெருமாள்பட்டு கிராமத்தை சேர்ந்த பாபுராம் என்பவரின் மகள் ஓவியா, மனநலம் பாதிக்கப்பட்டவர்.  உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு சென்ற அந்தப் பெண்ணிடம் இளைஞர்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவர்களைப் பிடித்து தர்மஅடி கொடுத்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்