2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-25 07:47 GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு விதிகள் வகுக்க கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக செலவு செய்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கடந்த 2015 ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்