திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு

"மதுரை மாநகராட்சிக்கு கூடுதல் வருமானம் "

Update: 2019-01-24 17:41 GMT
மதுரையில் பேட்ட, விஸ்வாசம் வெளியான திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்ததால் மாநகராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்ததால் 3 புள்ளி 53  கோடி ரூபாய் கேளிக்கை வரி கூடுதலாக கிடைத்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்த வழக்கறிஞர் ஆணையர் 23பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்
Tags:    

மேலும் செய்திகள்