திருவாரூரில் கஜா நிவாரணத் தொகை வழங்கக் கோரி மறியல்

கஜா புயலால் திருவாரூர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இரு வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-24 07:43 GMT
கஜா புயலால் திருவாரூர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இரு வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணத் தொகை வழங்கக் கோரி அழகிரி காலனி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதே போன்று நிவாரணத் தொகை கேட்டு பனகல் சாலையிலும் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்