"இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும்" - விஷால்

"தயாரிப்பாளர் சங்க கணக்கு வழக்கு குற்றச்சாட்டுக்கு பதில் தருவோம்"

Update: 2019-01-23 19:36 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 3ஆம் தேதி கூடுவதாக விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர்கள் வைக்கும் கணக்கு வழக்கு குற்றச்சாட்டுகளுக்கு இந்த பொதுக்குழுவில் பதில் தரப்படும் என்றும், இளையராஜாவின் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் என்றார்.  தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏற்கனவே இருந்த அலுவலகம் தவிர்த்து மூன்றாவது அலுவலகம் தற்போது கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்