கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
ஜன.23-ல் அறநிலைய துறை ஆணையர் ஆஜராக உத்தரவு
ஜனவரி 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு கோவில் ஊழியர் சங்கத்தினர், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தெரிவித்துள்ளனர்.
கோவில் ஊழியர்களின் கோரிக்கைகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.