வங்கிக் கணக்கு செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்

வங்கி தொடர்பான நடவடிக்கைகளை செல்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-10 21:41 GMT
சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த  அவர், வங்கிக் கணக்கு தொடர்பான புதிய அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செல்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு சென்று அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்