பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

Update: 2019-01-09 10:58 GMT
சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. அங்கு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து வீதிகளிலும் அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குற்றச்சம்பவங்கள் அங்கு பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,  அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்