அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனுமதியில் நீடிக்கும் சர்ச்சை

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விழாக்குழு தலைவர் கண்ணன் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

Update: 2019-01-09 02:13 GMT
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விழாக்குழு தலைவர் கண்ணன் என்பவர் மனுதாக்கல் செய்தார். ஆனால், ஜல்லிக்கட்டு விழாவை தமது குடும்ப விழாபோல், அவர் தன்னிச்சையாக நடத்துவதாகவும், வரவுசெலவுகளை காட்டுவதில்லை என்றும் குற்றம்சாட்டி ஊர் பொதுமக்கள் பலர் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இதுதொடர்பான, விசாரணைகளை இரு நீதிபதிகள் அடங்கிய முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சர்ச்சை நீடிக்கிறது.  
Tags:    

மேலும் செய்திகள்