காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, காளியம்மன் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அலங்கார வாகனங்களில் பிரம்மன், விஷ்ணு, காளி, எமதர்மன், பூதகனங்கள் உள்ளிட்ட வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக பவனி வந்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.