நாய்க்குட்டியை தரையில் வீசிய நபரை சுற்றி வளைத்த நாய்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த நாய்குட்டியை ஒருவர் தன் கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

Update: 2018-12-26 06:20 GMT
சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த நாய்குட்டியை ஒருவர் தன் கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதைவைத்து ப்ளூ கிராஸ் அமைப்பு சார்பில் மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பாலமுருகன் என்பது தெரியவந்தது. நாய்குட்டியை தரையில் வீசி எறியப்பட்டதை பார்த்த மற்ற நாய்கள் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தன. நாய்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் இருந்த இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்