சாலையை கடந்த பெண் மீது பைக் மோதி விபத்து : சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பு
சாலையை கடந்த பெண் மீது பைக் மோதி விபத்து : சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பு;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சாலையை கடக்க முயன்ற பிரேமா என்ற பெண் மீது, இருசக்கர வாகனம் மோதியது. தூக்கி வீசப்பட்டு
அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞரும் பலத்த காயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.