பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

Update: 2018-12-08 08:40 GMT
பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 
கோரியு​ள்ளனர். 25-க்கும் மேற்பட்ட துறைகளுடன் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் அல்லாத மற்ற ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் பதிவாளரின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தும் ஊழியர்கள், பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தேர்வாணையர் அலுவலகம், தொலைதூர கல்வி இயக்ககம் ஆகியவற்றை எளிதில் தொடர்புகொள்ள செல்போன் சேவை அவசியம் என்றும் கூறியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்