சர்கார் பட விவகாரம் - அரிவாளுடன் மிரட்டல் : வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது

சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக திரையரங்குகளில் பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது.

Update: 2018-12-07 02:45 GMT
சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக திரையரங்குகளில் பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக சென்னை போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். மிரட்டல் விடுத்த சஞ்சய் என்பவரை கைது செய்த போலீசார் தரைமறைவாகி விட்ட லிங்கதுரை என்பவரை தேடி வருகின்றனர்.  வீடியோவை எடுத்த அனிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்