இசை கச்சேரி நடத்தி ரூ50 ஆயிரம் வழங்கிய சிறுவன்
திருவேற்காட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் இசைக்கச்சேரி நடத்தி சம்பாதித்த 20 ஆயிரம் ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.
திருவேற்காட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் திருவருள் தனது நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தி சம்பாதித்த 20 ஆயிரம் ரூபாயையும் தான் இசைக்கருவி வாங்க வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.
இதேபோல் சிதம்பரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது சிறு சேமிப்பு நிதியிலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பொருட்கள் வாங்கி அனுப்பியுள்ளனர். சிறுவர்களின் இந்த உதவி செயல் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.