நூதன முறையில் பணம் பறிப்பு : காவலர், பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் விசாரணை

சென்னையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து காவலர் ஒருவர் நூதன முறையில் பணம் பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-27 04:24 GMT
சென்னை, பாடி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தரகர் மூலம் அமைந்தகரை பகுதியில் உள்ள பாலியல் தொழில் நடக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கும் , விஸ்வநாதனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் கோயம்பேடு காவல் நிலையத்தில்  புகார் அளித்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு காவல்நிலைய காவலர் விஸ்வநாதனிடம் வலுக்கட்டாயமாக பணம் வாங்கியுள்ளார். இதுபோன்றே பல சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்று இருந்ததையடுத்து இது குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், கோயம்பேடு காவல்நிலைய காவலரும் சேர்ந்து பலபேரிடம் இதே போலவே பணம் பறித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் கோயம்பேடு காவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்