ஸ்டெர்லைட் வழக்கு : முதலமைச்சர் பழனிசாமியே முழு பொறுப்பாளி - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முழு பொறுப்பாளி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-26 16:36 GMT
உச்சநீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முழு பொறுப்பாளி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வழக்கை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு, இதுவே எடுத்துக்காட்டு என, குறிப்பிட்டு உள்ளார். ஸ்டெர்லைட் வழக்கினை, ஆர்வமின்றி, அலட்சியமான முறையில் நடத்திய தமிழக அரசுக்கு, தமது அறிக்கையில் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்