குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்படி, அனைத்து தாலுக்காவில், பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-23 13:54 GMT
சென்னை சேர்ந்த வழக்கறிஞர் சுதா ராமன், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை தடுக்க, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை குறித்த காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்கும் வகையில் விதிகளை வகுத்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அடங்கிய முதன்மை அமர்வு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் ஆறு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதம் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்