​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.

Update: 2018-11-19 15:27 GMT
வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ்,  
சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.  மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து,  100 சிறந்த மாணவர்களை  வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பும் திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த திட்டத்திற்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்