மரம் விழுந்து வனத்துறை காவலர் பலி...
கொடைக்கானல் கீழ்மலை புளிகுத்திக்காடு பகுதியில், புயலால் சரிந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், வனத்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.
கொடைக்கானல் கீழ்மலை புளிகுத்திக்காடு பகுதியில், புயலால் சரிந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், வனத்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டுப்போன மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. அதில், வன வேட்டை தடுப்பு காவலர் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோலை ராஜ் என்ற மேலும் ஒரு ஊழியர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி ஆகிய இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.