சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - ரூ 2 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

சென்னை பாரிமுனை குறளகத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளின் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2018-11-15 04:13 GMT
சென்னை பாரிமுனை குறளகத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளின் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் காட்டப்படாத இரண்டு லட்சம் ரூபாய் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் இடையே பேரூராட்சி இயக்ககத்தில் பணிபுரியும் அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்