ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கை ஏற்பு : காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு, காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2018-11-14 02:22 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு, காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின் புலங்களை தெரிந்து கொள்ளவும், சில சாட்சிகளை விசாரிக்கவும், காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக அரசுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. ஆணையத்திற்கு நியமிக்கப்படும் இந்த காவல் ஆய்வாளர், போயஸ் கார்டனில் முதல் தளத்தில் பணியாற்றிய பணிப்பெண்களுக்கு, சம்மன் அனுப்ப அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை விசாரிப்பார் என்றும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என காவல் நிலையத்தில் அளித்த புகார்களை விசாரித்து தெரிவிப்பார் என்றும் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்