சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்.

Update: 2018-11-14 01:41 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் 32 சவரன் தங்க நகை இருந்ததை அறிந்த அவர், அதனை உடனடியாக உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நகையை, அதனை தவறவிட்ட சரவணன் என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகையை நேர்மையாக ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனுக்கு, போலீசார்  பொன்னாடை போர்த்தியும் பரிசு வழங்கியும் கௌரவப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்