திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-12 12:17 GMT
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். புள்ளம்பாடி ஆனந்தபுரம் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பங்கேற்ற, 98 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த லால்குடி நீதிமன்றம் தலா மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்