விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மரணம் - அரசுப் பேருந்தை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சகாயராஜ் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Update: 2018-11-04 06:18 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சகாயராஜ் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். திருநயினார்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் முட்டத்தைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர் தகராறு செய்ததாகவும், அவரை விசாரணைக்காக போலீஸ் அழைத்துச் சென்றபோது, வழியிலே அவர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் சகாயராஜ் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள்,  அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்