ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்

Update: 2018-11-01 21:10 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் எல்எல்ஆர், மற்றும் லைசன்ஸ்ஆகியவைக்கு முறையாக  ரசீது போடப்படுகிறதா, கணக்கு வழக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 4 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மயிலாடுதுறையில் குறைந்த அளவில் பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்