ஆபாச வார்த்தைகளை நீக்கும் வரை, வடசென்னை படத்தை திரையிடக்கூடாது - வழக்கறிஞர் புகார்

சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் கொடுத்துள்ள புகாரில்,வடசென்னை படத்தில் உள்ள ஆபாச வார்த்தைகளை தணிக்கை குழு நீக்க வேண்டியும் அதுவரை படத்தை திரையிடக்கூடாது என்றும் கோரியுள்ளார்.

Update: 2018-10-22 13:23 GMT
இயக்குனர் வெற்றிமாறன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் கொடுத்துள்ள புகாரில், அண்மையில் வெளியான வடசென்னை படத்தில் உள்ள ஆபாச வார்த்தைகளை தணிக்கை குழு நீக்க வேண்டியும், அதுவரை படத்தை திரையிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக இயக்குனர் வெற்றிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்