மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2018-10-22 08:39 GMT
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 83 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 8 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கருப்பாலை பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி வீரம்மாள் மற்றும் அனுப்பானடியை சேர்ந்த மீனாட்சி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்