வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

Update: 2018-10-21 02:05 GMT
வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள்  இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.  பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், மழை காலத்தில் உடனடியாக காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அரசு உடனடியாக மாற்று இடம் வழங்கி, வீடு கட்டிக் கொடுத்தால், காலி செய்ய தயாராக இருப்பதாகவும் ஆட்சியரிடம் அளித்த மனுவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்