தமிழகம் முழுவதும் பரவலாக மழை..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Update: 2018-10-16 21:18 GMT
திருவண்ணாமலை 
பல பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ஏரிகள், குளங்கள் கிணறுகளில் தண்ணீரின் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் வடுவூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் டெல்டா விவசாயிகள் மகழ்ச்சியில் உள்ளனர்.

கொடைக்கானல் 
கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்