பத்திரப்பதிவில் முறைகேடை தவிர்க்க பட்டா கட்டாயம் - தமிழக அரசு திட்டம்

பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-10-15 05:30 GMT
பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிலம், இடங்கள் உள்ளிட்டவை தாய் பத்திரத்தின் அடிப்படையிலோ அல்லது பட்டா மூலமோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், கர்நாடகாவைப் போல, பத்திரப்பதிவுக்கு, பட்டாவை கட்டாயப்படுத்த வருவாய்த் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும் முறையை ஆய்வு செய்ய குழுவை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்