பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை....
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மஞ்சளார் அணைக்கு மேல் பகுதியில் உள்ள தலையாற்று அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் டம்டம் பாறை பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு, தலையாற்று அருவியை பார்த்தும், அழகான அக்காட்சியின் பின்னணியில் செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.