காதலனுக்கு அரிவாள் வெட்டு - காதலி கடத்தல்

கன்னியாகுமரி அருகே காதலனை அரிவாளால் வெட்டிய உறவினர்கள், பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-13 10:00 GMT
* கன்னியாகுமரி மாவட்டம்  உசரவிளை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஸ்டார்வின். பெயிண்டராக பணிபுரியும் இவர், அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலின்  மகள் டிக்சோனாவை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த டிக்சோனாவின் பெற்றோர், அவருக்கு  திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் ஸ்டார்வினும், டிக்சோனாவும் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி  யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். 

* பின்னர் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்து , கன்னியாகுமரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைய சென்றனர். அப்போது  டிக்சோனாவின் உறவினர்கள் கோவளம் பகுதியில் காதல் ஜோடி வந்த காரை வழிமறித்து அடித்து நொறுக்கினர். ஸ்டார்வினை அரிவாளால் சரமாரியாக வெட்டி டிக்சோனாவை கடத்தி சென்றனர்.   படுகாயமடைந்த ஸ்டார்வின் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார்  மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்