உயிரை பணயம் வைத்து ஆபத்தான பேருந்து பயணம் - வேகமாக பரவும் வீடியோ

கடலூரில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்காக பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் தினமும் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

Update: 2018-10-09 16:07 GMT
கடலூரில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்காக பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் தினமும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் விடப்படவில்லை. இந்நிலையில், அரசு பேருந்துகளில் ஆபத்தான நிலையில், படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த காட்சிகள், சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருவதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்