காலமான எம்.எல்.ஏ. போஸ்க்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த 2 வாக்காளர்கள் விருப்பம்

மரணமடைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ்க்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் தெரிவித்து வாக்காளர்கள் இரண்டு பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-10-06 05:27 GMT
மரணமடைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ்க்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் தெரிவித்து வாக்காளர்கள் இரண்டு பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016 இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.  ஏ.கே.போஸ் மரணமடைந்த நிலையில்,  திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் எம்.போஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோர் இந்த வழக்கைத் தொடர விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்