மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதை போலீஸ்...

திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் போதையில் இருந்த போலீஸ் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.

Update: 2018-10-06 01:30 GMT
திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் போதையில் இருந்த போலீஸ் ஒருவர்  ரகளையில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஒருவர், அங்குள்ள பெண்களை மது போதையில் தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக் கேட்டவர்களையும் அவர் அடித்துள்ளார். இதனை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் அந்த வீடியோவை வைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்