குட்கா ஊழல் - மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.

Update: 2018-10-05 00:08 GMT
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் ஜி.எஸ்.டி துறையின் கூடுதல் இயக்குநர் செந்தில் வேலன் மற்றும் வணிகவரி புலனாய்வு துறையின் முன்னாள் கூடுதல் ஆணையர் ஸ்ரீ தர் ஆகிய இருவரின் வீடுகளில்,. சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில், முழு உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர, சிபிஐ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் காவல், மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்