காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு : 2.5 கோடி இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் துவங்கின.

Update: 2018-10-03 07:32 GMT
காலாண்டு தேர்வுகளுக்கு பிறகு கடந்த மாதம் 22ஆம் தேதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இரண்டரை கோடி இலவச பாடப்புத்தகங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. சென்னை மாநில மகளிர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு புதிய இலவச பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்