ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு : கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்

கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்.

Update: 2018-10-01 19:24 GMT
கடலூர் மற்றும் காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள், முகத்தில் பிரதமர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது புகைப்படங்களை முகமூடிகளாக அணிந்து கழுத்தை இறுக்கி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 


Tags:    

மேலும் செய்திகள்